லண்டன்: ஸ்டோக் சிட்டியின் காற்பந்துக் குழுவின் நிர்வாகியான மார்க் ஹியூசுக்கு 8,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த முடிவுக்குக் கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அவருக்கு இந்த அபராதத்தை இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் விதித்தது. கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி 4-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஆட்டத் தின்போது ஒழுங்கீனம் காரணமாக ஹியூசுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ஹியூசுக்கு அபராதம்
1 mins read

