இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டுவீட்டிற்கு கோஹ்லி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணி கள் மோதிய டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய வீரர் அஸ்வினின் செயல்பாடு வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இது குறித்து ஹர்பஜன் சிங் பதிவு செய்த டுவீட்டில், "கடந்த 4 ஆண்டுகளாகவே இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் உள்ளது. "நாங்கள் இருந்த தருணங் களில் இதுபோன்ற ஆடுகளங் கள் இருந்திருந்தால் நானும் கும்பளேவும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருப்போம்," எனக் கூறியிருந்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
இதற்கான கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட கோஹ்லி, ஹர்பஜன் சிங்கின் கேள்விக்கு பதிலளித்தார். "சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு வேகமாக பந்தைச் சுழலச் செய்கின்றனர் என்றும் பின்னர் அது தரையில் பட்டு எப்படி திரும்புகிறது என்பதுமே முக்கியம். "கடந்த உலகக் கிண்ணப் டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நாம் தோல்வி அடைந்தோம். அப்போது நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தரமானவர்கள் என்று கூறப்பட்டது. "அதே சுழற்பந்து வீச்சாளர்கள்தான் தற்போதும் விளையாடினர். ஏன் அவர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, "எங்களுடைய திறமையை நாங்கள் நம்புகிறோம். எங்களுக்கு ஒருதலைபட்சமாக சாதகமாகும் சூழ்நிலைகளை உருவாக்கி ஆட வேண்டிய அவசியம் இல்லை," என்று விராத் கோஹ்லி கூறியுள் ளார்.
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தற்கான கிண்ணத்தை கோஹ்லியும் பந்துவீச்சாளர் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்த அஸ்வினும் பெற்றுக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

