மொரின்யோ மீது குற்றச்சாட்டு

மொரின்யோ மீது குற்றச்சாட்டு

1 mins read

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் லிவர்பூலுக்கும் இடையில் நடந்த ஆட்டத்துக்கு முன்பு நடுவரைப் பற்றி கருத் துரைத்ததாக யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்துக்கு மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த நடுவரான ஆண்டனி டெய்லர் நியமிக்கப்பட்டார். டெய்லரை அந்த ஆட்டத்தின் நடுவராக நியமித்தது அவருக்கு நெருக்குதலைத் தரும் என்று மொரின்யோ தெரிவித்திருந்தார். தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க மொரின்யோவுக்குக் கால அவ காசம் கொடுக்கப்பட்டு உள்ளது.