பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரிட்டிஷ் வீரர் ஆண்டி மர்ரே தரவரிசை யில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் அதிர்ச் சித் தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரி சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதியில் தற்போதைய வெற்றி வீரரான ஜோக்கோவிச் 4-6, 6-7 (2) என்ற நேர் செட்களில் குரோவேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார். தரவரிசையில் 122 வாரங் களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் ஜோக்கோவிச். இந்த ஆட்டத்தில் தற் பொழுது தோற்றதன் மூலம் அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டென்னிஸ்: முதலிடத்தில் ஆண்டி மர்ரே
1 mins read

