கொச்சி: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு கேரளா பிளார்ஸ்டர்ஸ் குழு தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா வும் கவுகாத்தி குழுவும் மோதின. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கவுகாத்தி அணியினரும் சமநிலை கண்டாலே அரையிறுதி வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையுடன் கேரளா வீரர்களும் ஏறத்தாழ 53,000 ரசிகர்களுக்கு முன்னால் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்புடன் இருந்தனர். ஆனால் முற்பாதியில் இரு குழுக்களும் கோல் ஏதும் போடவில்லை. பிற்பாதியில் நிலைமை கேரள வீரர்களுக்குச் சாதகமாக மாறியது. 66வது நிமிடத்தில் சக வீரர் முகம்மது ரஃபி அனுப்பிய பந்து கேரளாவின் நட்சத்திர வீரர் சி.கே. வினீத்திடம் சென்றது.
அரையிறுதிக்குள் நுழைந்த கேரள அணி
1 mins read

