மும்பை: பேங்காக்கில் நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் வாகை சூடி கிண்ணம் ஏந்திய இந்தியப் பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டு தெரி வித்துள்ளது. மொத்தம் ஆறு நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டு மாபெரும் வெற்றி யாளர் பட்டத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது. போட்டியில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகுடம் சூடியது. இந்திய அணி இந்தக் கிண்ணத்தை வெல்வது ஆறாவது முறையாகும்.
கிண்ணம் ஏந்திய இந்திய மகளிருக்குப் பாராட்டு
1 mins read

