முன்னிலை பெற்றது இந்தியா

முன்னிலை பெற்றது இந்தியா

1 mins read
17411679-59ad-4e4d-b39e-b877133684b7
-

மும்பை: தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் அருமையாக ஆடி சதமடிக்க, இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 51 ஓட்டங்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் 'டிரா'வில் முடிய, அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி 2-0 என முன்னிலைக்குச் சென்றது இந்திய அணி. இத னால், கடைசி இரு ஆட்டங்களில் குறைந்தது ஒரு வெற்றி அல்லது இரண்டிலும் 'டிரா' அல்லது சம நிலை கண்டால் போதும், இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விடும்.

இங்கிலாந்து வீரர்களின் பந்துகளைத் திறம்பட எதிர்கொண்டு ஆடி, தொடரில் இரண்டாவது சதமடித்து சாதித்த மகிழ்ச்சியில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி (மேல்). படம்: ஏஎஃப்பி