சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்களை ஓரங்கட்டிய பாகிஸ்தான் அணி

சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்களை ஓரங்கட்டிய பாகிஸ்தான் அணி

1 mins read

காலே: இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் அணி பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பந்தடித்த சிங்கப்பூர் அணி 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து, பந்தடித்த பாகிஸ்தான் 8.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிங்கப்பூர் அணி அதன் அடுத்த ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியுடன் மோதுகிறது. மற்றோர் ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.