மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான வெய்ன் ரூனி யுனைடெட்டுக் காகத் தனது 249வது கோலைப் போட்டதன் மூலம் யுனைடெட்டின் வரலாற்றுப் புத்தகங்களில் அழியா இடத்தைப் பிடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற எஃப்ஏ கிண்ண ஆட்டம் ஒன்றில் யுனைடெட் குழு ரெடிங் குழுவை 4-0 என்ற கோல் கானக்கில் வீழ்த்தியது. ஆனால் அந்த ஆட்டத்தில் பெரிதாக முத்திரை பதித்தவர் ரூனிதான். இதற்கு முன்பு அந்த சாதனையை நிகழ்த்தியவர் யுனைடெட்டின் வாழும் சகாப்தம் என கருதப்படும் சர் பாபி சார்ல்டன். லீக், சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், இதர ஆட்டங்கள் என மொத்தம் 543 ஆட்டங்களில் ரூனி யுனைடெட்டுக்காக 249 கோல்களைப் போட்டுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் ஆக அதிகமான கோல்கள் போட்டவர் எனும் சர் பாபி சார்ல்டனின் சாதனை முறியடித்தவரும் ரூனிதான்.
249 கோல்கள்: சாதனையைச் சமன் செய்த வெய்ன் ரூனி
1 mins read
-

