கட்டாக்: கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங், இங்கி லாந்து அணிக்கெதிரான 2வது போட்டியில் தமது அணி வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந் தார்.
இந்திய அணி 25 ஓட்டங் களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டு இருந்த நிலையில் யுவராஜ் சிங் கும் டோனியும் இணைந்து சரி வைத் தடுத்து நிறுத்தி, அணியைத் தூக்கி நிறுத்தினர்.
முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் ஆறு விக் கெட் இழப்பிற்கு 381 ஓட்டங்களை எடுத்தது. பெரும் இலக்கை விரட் டிய இங்கிலாந்து அணி, வெற் றியை நெருங்கிய வேளையில் கடைசி நேரத்தில் சொதப்பியதால் பதினைந்து ஓட்டங்களில் தோற்றுப் போனது. அந்த அணி 50 ஓவர் களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களை எடுத் தது.