பெங்களூரு: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல்) வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உட்பட ஏழு வீரர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இருந்தனர். எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்ப மான வீரர்களின் பெயர் பட்டிய லைத் தாக்கல் செய்துள்ளன. இதில் எந்த அணிகளும் விரும்பிக் கேட்காத 8 நாடுகளைச் சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளன. தற்போது 639 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம்
1 mins read

