பெங்களூரு: இந்தியா=ஆஸ்திரேலியா அணி களுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி விளையாட் டரங்கில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குச் சாதகமாக ஆடுகளம் இருந் தாலும் எதிர்பாராதவிதமாக இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. இதனால் பெங்களூரு ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக இந்திய அணி யினர் அங்கு வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளே அளித்த பேட்டியில், "இந்த ஆடுகளம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. பொதுவாக, இது பந்தடிப்புக்குச் சாதகமாக இருக்கலாம். ஆடுகளத்தைப் பொறுத்து ஆட்டத்தின் வியூகம் அமைக்கப்படும்," என்றார்.
ஆஸி.க்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா
1 mins read

