மூன்று போட்டிகளில் விளையாடத் தடை

மூன்று போட்டிகளில் விளையாடத் தடை

1 mins read

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து வீரர் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச் சிற்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப் பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தின்போது, போர்ன்மத் வீரர் மிங்சின் காதணி மேன்யூ வீரர் இப்ராஹிமோவிச் மீது குத்தியது. இதனையடுத்து இப்ராஹிமோவிச் மிங்சின் முகத் தில் முழங்கையால் தாக்கினார். எனவே இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. மிங்ஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ள நிலையில், இப்ராஹிமோவிச் தடையை ஏற்றுக்கொண்டார்.