லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் இருந்து ஆர்சனல் வெளியேறியதை அடுத்து, அதன் நிர்வாகி வெங்கர் குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்சனல் ரசிகர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். 'ரவுண்ட் ஆஃப் 16' பிரிவின் 2வது சுற்றில் பயர்ன் மியூனிக் குழுவுடன் மோதியது ஆர்சனல். முதல் சுற்றில் 1=5 என்று தோல்வி கண்டிருந்த ஆர்சனல் தனது சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளை யாடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், எதிரணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பும் ஆர்சனல் வீரருக்குக் கிடைத்த சிவப்பு அட்டையும் அந்த எதிர் பார்ப்பை தவிடு பொடியாக்கி விட்டது.
வெளியேறியது ஆர்சனல்; வெங்கர் பதவிக்கு ஆபத்து
1 mins read

