ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா பந்தடிக்க முடிவு செய்தது. சரியாக 50 ஓட்டங்கள் எடுத்தபோது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ரென்ஷா 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் நடையைக் கட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷேன் மார்ஷை (2) அஸ்வின் வந்த வழியே போக வைத்தார்.
299 ஓட்டங்கள் குவித்த ஆஸி.
1 mins read

