லண்டன்: அண்மையில் நடைபெற்ற லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த முடிவில் அதிருப்தி கொண்டு அவரைச் சூழ்ந்துகொண்ட தனது வீரர்களை மான்செஸ்டர் சிட்டி கட்டுப்படுத்த தவறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆட்டத்தின்போது லிவர்பூலுக்கு நடுவர் மைக்கல் ஒலிவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இதற்குச் சிட்டி ஆட்டக்காரர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிடைத்த பெனால்டியைப் பயன்படுத்தி லிவர்பூல் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டம் முடிவதற்குள் சிட்டி கோல் போட்டு சமநிலை கண்டது. தன்மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க சிட்டிக்கு நாளை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களைக் கட்டுப்படுத்த தவறியதாக மான்செஸ்டர் சிட்டி மீது குற்றச்சாட்டு
1 mins read

