டாக்கா: பங்ளாதேஷில் நடை பெற்ற இரண்டாவது நிலை லீக் கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் மீது ஆத்திரமடைந்த பந்து வீச்சாளர் ஒருவர் 4 பந்துகளில் 92 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எதிரணியை வெற்றி பெறச் செய்த சம்பவம் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது. ஆக்சியம், லால்மேட்டியா அணிகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி நடைபெற்றது. ‚ "பூவா தலையாவை நிர்ண யிக்க நாணயத்தை சுழற்று வதிலேயே சர்ச்சை ஆரம்பித்து விட்டது. எங்கள் அணித் தலைவரால் சுண்டிவிடப்பட்ட நாணயம் எந்தப் பக்கம் விழுந்தது என்பதைப் பார்க்கக்கூட நடுவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் எங்களை முதலில் பந்தடிக்க அழைத்தனர். ஆட்டத் தின்போது நடுவர்கள் எங்கள் அணிக்கு எதிராக மிக மோசமாக செயல்பட்டு வந்தனர். என் அணி வீரர்கள் மிகவும் இளம் வயதினர். அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்.
நடுவர் மோசடி: நான்கு பந்துகளில் 92 ஓட்டங்கள்
1 mins read

