கிரிக்கெட்:: உகாண்டாவிடம் தோற்றது சிங்கப்பூர்

கிரிக்கெட்:: உகாண்டாவிடம் தோற்றது சிங்கப்பூர்

1 mins read

கிரிக்கெட்: சிங்கப்பூர் தோல்வி உகாண்டா: உலகக் கிரிக்கெட் 3ஆம் நிலைப் போட்டியை ஏற்று நடத்தும் உகாண்டாவின் பந்து வீச்சில் சுருண்டது சிங்கப்பூர். 218 ஓட்டங்கள் என்ற இலக்கு டன் பந்தடிக்கத் தொடங்கிய சிங்கப்பூர் அணியின் பந்தடிப்பு வரிசையை நிலைக்குலையச் செய்தனர் உகாண்டாவின் பந்து வீச்சாளர்கள். 44 ஓவரில் 151 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டு களையும் இழந்து தோல்வி அடைந்தது சிங்கப்பூர். முதலில் பந்தடித்து 217 ஓட்டங்களை எடுத்த உகாண்டா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.