தென்கிழக்காசிய விளையாட்டு: வெளிநடப்பு செய்த இந்தோனீசியா

தென்கிழக்காசிய விளையாட்டு: வெளிநடப்பு செய்த இந்தோனீசியா

1 mins read

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் மகளிருக்கான சேபாக் தக்ராவ் போட்டியில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தோனீசிய அணி நேற்று முன்தினம் வெளிநடப்பு செய்தது. கடுமையான போட்டிக்குப் பிறகு முதல் செட்டை 22-20 எனும் புள்ளிக் கணக்கில் மலேசியா கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் இந்தோனீசியா 16=10 எனும் புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தபோது நடுவரின் முடிவு குறித்து அதிருப்தி கொண்ட இந்தோனீசியப் பயிற்றுவிப்பாளர் தமது அணியினரை மைதானத்திலிருந்து வெளியேறும்படி கூறினார். இதனால் அந்த ஆட்டத்தில் மலேசியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.