கிண்ணம் வென்றால் €350,000 பரிசு

கிண்ணம் வென்றால் €350,000 பரிசு

1 mins read

பெர்லின்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில், நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி அந்தப் போட்டியில் வென்று கிண்ணத்தைத் தக்கவைத்தால் அவ்வணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 350,000 யூரோ (S$556,310) ஊக்கத்தொகை வழங்கப்ப்டும் என்று அந்நாட்டுக் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது. பிரேசிலில் 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வென்று நான்காம் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது ஜெர்மனி. அப்போது அவ்வணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 300,000 யூரோ ஊக்கத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.