'உமேஷ் யாதவ் எப்போதும் சிறப்பாகப் பங்களிப்பவர்'

'உமேஷ் யாதவ் எப்போதும் சிறப்பாகப் பங்களிப்பவர்'

1 mins read

ஹைதராபாத்: உமேஷ் யாதவ் எப்போதும் 100 விழுக்காட்டிற்கு மேல் பங்களிப்பைக் கொடுப்பவர் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா=வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடை பெற்றது. மூன்று நாட்களிலேயே முடிவடைந்த இந்த டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாகூர் காயம் அடைந் தாலும் தனி ஒரு மனிதனாக உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துக் காட்டினார். ''இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங் களை நெருக்கடியான சூழ் நிலைக்குத் தள்ளியது. அதிலிருந்து நாங்கள் மீண்டு விட்டோம். 56 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது போனஸ். "நாங்கள் மிகப் பெரிய முன்னிலை வகிக்க முயன்றோம். ஆனால் மீண்டும் பந்தடிப்பில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலி ருந்து நாங்கள் மீண்டு வர வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடியதால் சூழ்நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்த மண்ணில் எதிரணிக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.