ஹாக்கி: இந்திய அணியின் சோகம் தொடர்கிறது

புவனேஸ்வர்: உலகக் கிண்ண ஹாக்கி போட்டிகளில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. காலிறுதி ஆட்டத்தில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1=2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றுப்போனது. இதனால் 43 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணம் வென்று பெருமை சேர்க்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பதினான்காவது முறையாக நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்றன. 'சி' பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்திருந்த இந்திய அணி, அம்மூன்று அணிகளையும் வெற்றி கொண்டு நேரடியாகக் காலிறுதிக் குள் நுழைந்தது.

இதோடு, சொந்த நாட்டு ரசிகர் களின் ஆதரவும் இருப்பதால் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், பலமிக்க நெதர்லாந்து அணி முட்டுக்கட்டை போட, காலிறுதியுடன் இந்திய அணியின் உலகக் கிண்ணப் பயணம் முடி வுக்கு வந்தது.

உலகக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து ஆட்டக்காரரின் தடுப்பை மீறி சக இந்திய வீரருக்குப் பந்தைக் கடத்த முயலும் இந்திய ஹாக்கி அணியின் ஆகாஷ்தீப் சிங் (வலது). படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!