புவனேஸ்வர்: உலகக் கிண்ண ஹாக்கி போட்டிகளில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. காலிறுதி ஆட்டத்தில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1=2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றுப்போனது. இதனால் 43 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணம் வென்று பெருமை சேர்க்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பதினான்காவது முறையாக நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்றன. 'சி' பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்திருந்த இந்திய அணி, அம்மூன்று அணிகளையும் வெற்றி கொண்டு நேரடியாகக் காலிறுதிக் குள் நுழைந்தது.
இதோடு, சொந்த நாட்டு ரசிகர் களின் ஆதரவும் இருப்பதால் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், பலமிக்க நெதர்லாந்து அணி முட்டுக்கட்டை போட, காலிறுதியுடன் இந்திய அணியின் உலகக் கிண்ணப் பயணம் முடி வுக்கு வந்தது.
உலகக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து ஆட்டக்காரரின் தடுப்பை மீறி சக இந்திய வீரருக்குப் பந்தைக் கடத்த முயலும் இந்திய ஹாக்கி அணியின் ஆகாஷ்தீப் சிங் (வலது). படம்: இபிஏ