பெர்த்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன் னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூவர் அரை சதம் அடிக்க, முதல் நாள் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங் களை எடுத்திருந்தது. புதிய பெர்த் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனக் கணிக்கப்பட்டதால் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சா ளர்களுடன் களமிறங்கியது. காய மடைந்த அஸ்வின், ரோகித் ஆகி யோருக்குப் பதிலாக உமேஷ் யாதவும் ஹனுமா விகாரியும் சேர்க்கப்பட்டனர். முதல் போட்டியில் வெற்றியை இழந்தபோதும் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.
முதல் ஆட்டவேளையில் முகம்மது ஷமி தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சொல் லும்படியாகப் பந்து வீசவில்லை. குறிப்பாக, இஷாந்த் சர்மாவின் 'லைன் அண்ட் லெங்த்' படுமோச மாக இருந்தது. இதனால் ஆஸ்தி ரேலிய அணியின் தொடக்க வீரர்களான மார்க்கஸ் ஹாரிசும் ஆரோன் ஃபிஞ்ச்சும் மிக எளிதாக ஓட்டம் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்பை வீழ்த்திய இஷாந்துடன் (நடுவில்) சிரித்து மகிழும் கோஹ்லி (இடது), ரகானே. படம்: இபிஏ