பாரிஸ்: பாதுகாப்புக் காரணங் களுக்காக தொடர்ந்து இரண்டா வது வாரமாக பிரெஞ்சு லீக் 1 காற்பந்துப் போட்டிகளில் சில ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதோடு, அண்மையில் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு களும் காயங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில், இன்று நடக்கவிருந்த பிஎஸ்ஜி=ஜிஜோன் குழுக்கள் மோதும் ஆட்டம் உட்பட ஐந்து ஆட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் நடக்கும் மற்ற ஆட்டங்களின் தொடக்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
ஐந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு
1 mins read

