புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை யாக திகழ்ந்து வரும் சாய்னா நேவால், சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டதாக கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்தார். திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை சாய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர்கள் இருவரும் காத லித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில், தாங்கள் இருவரும் காதலிப்பதாக கடந்த அக்டோபரில் சாய்னா ஊடகங் களிடம் கூறினார்.
"நாங்கள் இருவரும் நீண்டகா லமாக காத லித்து வருவது உண்மை தான். டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்," என்று 28 வயது சாய்னா அப்போது தெரிவித்து இருந்தார். அதன்படி இருவரும் இப் போது திருமணம் செய்துகொண்ட னர். இந்தத் தம்பதியின் விமரி சையான திருமண வரவேற்பு நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, உலக பேட்மிண்டன் தரவரிசையில் தற்போது 10வது நிலையில் உள்ளார்.
சாய்னா நேவால்-பாருபள்ளி காஷ்யப் தம்பதியர். படம்: இணையம்