பெர்த்: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங் சில் 326 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணித் தலைவர் விராத் கோஹ்லி சதம் அடித்தபோதிலும் 283 ஓட்டங் களிலும் சுருண்டது. 43 ஓட்டங்கள் முன்னிலை யுடன் இரண்டாவது இன்னிங் சைத் தொடங்கிய ஆஸதிரேலியா 243 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா விற்கு 287 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவால்மிக்க இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் முதல் பந்தை சந்திக்க ஸ்டார்க் பந்துவீச்சைத் தொடங்கினார்.
ஆட்டத்தின் நான்காவது பந்திலேயே லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாரா 4 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு முரளி விஜயுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்குத் தாக்குப்பிடித்தது. ஆனால் நாதன் லயன் பந்தில் கோஹ்லி (17), முரளி விஜய் (20) நடையைக் கட்டினர். இந்தியா 98 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரகானே 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு விஹாரிய்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தற்போது வரை இந்தியா 41 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ஒட்டங்களுடனும் ரிஷப் பந்த் 9 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு 175 ஓட்டங்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுகள் உள்ளன.