சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலேயே இந்தியா தோல்வியைத் தழுவியது. இதற்கு அணி வீரர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர். இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, பந்து வீச்சு சிறப்பாக இருந் தாலும் விளையாடிய விதம் சரியில்லை என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அணியின் துணைத் தலைவர் ரோகித் சர்மா, "4வது வரிசையில் விளையாடு வதற்கு டோனி மிகவும் பொருத்த மானவர்," என்றார்.
"அம்பதி ராயுடு 4வது வரிசையில் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினார். யாரை 4வது வரிசையில் இறக்குவது என்பது அணித் தலைவர், பயிற்சியாளரின் முடிவைப் பொறுத்தது. ஆனால் டோனி 4வது வரிசையில் இறக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி," என்று ரோகித் சர்மா சொன்னார்.