ஹர்திக் பாண்டியா, ராகுலுக்குப் பதில் தமிழகத்தின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந் திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியாவும் லோகேஷ் ராகுலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பெண்கள் குறித்துத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் அவர்கள் இருவரும் அதிரடியாக இடைநீக்கம் செய்யப் பட்டனர். இதையடுத்து பாண்டி யாவும் ராகுலும் நாடு திரும்பினர். இந்தச் சூழ்நிலையில் நீக்கப் பட்ட இரு வீரர்களுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த 'ஆல் ரவுண்டர்' விஜய் சங்கரும் ‌ஷுப் மேன் கில்லும் சேர்க்கப்பட்டுள் ளனர்.

அண்மையில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்களை அதிர்ஷ்டம் திரும்பிப் பார்த்துள்ளது. விஜய் சங்கர் ஏற்கெனவே இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ளார். 'மிடில் ஆர்டர்' பந்தடிப்பாளரான விஜய் சங்கர், 27, ஐந்து 'டி20' போட்டிகளில் விளையாடியுள்ளார். விஜய் சங்கருடன், ‌ஷுப்மேன் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற் கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!