செக் வீராங்கனையிடம் சரணடைந்த செரீனா 

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற கிட்டிய அருமையான வாய்ப்பை கோட்டை விட்டார் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
நான்கு வெற்றிப் புள்ளிகளைப் பறிகொடுத்ததோடு, மூன்றாவது செட்டில் 5-1 என வலுவான முன்னிலையில் இருந்தும் பிடியை நழுவவிட்டதால் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் செரீனாவின் கனவும் கலைந்தது.
அவரை எதிர்த்தாடிய செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (படம்) முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். இருந்தாலும் எழுச்சியுடன் ஆடிய அவர் 6-4 எனத் தனதாக்கினார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் செரீனாவின் கை ஓங்கியிருந்தபோதும் கடைசி நேரத்தில் பிளிஸ்கோவாவின் அதிரடி ஆட்டத்தில் அவர் நிலைகுலைந்து போனார். இறுதியில், 7-5 எனப் போராடி செட்டைக் கைப்பற்றிய பிளிஸ்கோவா அரையிறுதிக் குள் நுழைந்தார்.
அரையிறுதியில் அவர் இளம் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர் கொள்கிறார்.
காலிறுதியில் ஒசாகா 6-4, 6-1 என்ற செட் களில் உக்ரேனின் ஸ்விட்டோலினாவை வென்றார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!