திருப்பி அடிக்க தயாராகும் இந்தியா

வெலிங்டன்: நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த அவமானகரமான தோல்விக்குப் பதிலடி தர இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
குணமடைந்து வரும் மகேந்திர சிங் டோனி நாளை நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
ஏற்கெனவே இந்திய அணியிடம் 3 -1 எனத் தொடரை இழந்திருந்தாலும் 4வது போட்டியில் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, டோனி இருவரும் விளையாடாத நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 30.5 ஓவரிலேயே வீழ்ந்தது.
94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, நியூசிலாந்து அணியை பந்துவீச்சிலும் கட்டுப்படுத்தத் தவறியதால் வெற்றியைப் பறிகொடுத்தது.
இந்நிலையில், நாளை நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள வெஸ்ட்பேக் மைதானத்தில் இந்த அணிகள் கடைசி ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன.
இம்மைதானத்தில் நடந்த இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற போட்டியில் பெற்ற வெற்றி நியூசிலாந்துக்கு நம்பிக்கை அளித்தாலும் அதன் பந்தடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!