இபிஎல் தொடரில் நீடிக்க வீரர்களை வாங்கிய குழுக்கள்

இபிஎல் தொடரில் நீடிக்க வீரர்களை வாங்கிய குழுக்கள்

1 mins read

லண்டன்: பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் பிற்பாதிக் கட்டத்தை அடைந் துள்ள நிலையில், லீக்கில் நீடிக்கும் பொருட்டு சில குழுக்கள் வீரர்களை வாங்கியுள்ளன. வீரர்களை வாங்குவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், பட்டியலில் 14வது இடத்தில் உள்ள நியூகாசல் 20 மில் லியன் யூரோவுக்கு அட்லாண்டா யுனைடெட்டின் மிகுவல் அல்மி ரானை வாங்கி உள்ளது. இதன் மூலம் நியூகாசல் கடந்த 14 ஆண்டுகளில் ஆக அதிக தொகைக்கு ஒரு வீரரை வாங்கியது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டல் பேலஸ் குழு, செல்சி வீரர்பட்‌ஷுவாயை கட னாகப் பெற்றுள்ளது. லிவர்பூலின் லாசர் மார்கோவிச் உட்பட இருவரை வாங்கியுள்ளது ரெலிகேஷன் நிலையில் உள்ள ஃபுல்ஹம்.