ஒன்றுமே புரியவில்லை: புலம்பும் மொரிசியோ சாரி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் செல்சியை 6=0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி நேற்று அதிகாலை பிழிந்து எடுத்தது.
இந்தப் படுதோல்வி செல்சி நிர்வாகி மொரிசியோ சாரியை அதிர்ச்சியில் உறைய வைத் துள்ளது. தமக்கு ஒன்றுமே புரியவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் புலம்பினார்.
"இந்தப் படுதோல்வி குறித்து என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை. பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்டோம். ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் சிட்டி கோல் போட்டதும் எனது வீரர்கள் துவண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். எங்களால் விளையாட முடியாமல் போனது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வலிமைமிக்க குழுவுக்கு எதிராக விளையாடியபோது நிறைய தவறுகளைச் செய்துவிட்டோம்," என்று சாரி கூறினார்.
1991ஆம் ஆண்டில் நாட்டிங் ஹம் ஃபாரஸ்ட் குழுவுக்கு எதிராக 7=0 எனும் கோல் கணக்கில் தோற்ற பிறகு, நேற்றைய ஆட்டத்தில்தான் செல்சி மிக மோசமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!