காற்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் பொறுப்பில் கடந்தாண்டு அமர்த்தப்பட்ட வின்சென்ட் சுப்ரமணியத்தின் பதவி காலம் முடிந்துள்ளதாக சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்தது.
கடந்த ஓராண்டாக இவர் தேசிய இளையர் பிரிவு, எஸ்-லீக் இளையர் பிரிவு, பள்ளி காற்பந்து பயிலகம் மற்றும் காற்பந்து மேம்பாட்டு நிலைய பயிற்றுவிப்பாளர்களைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.
"இளைய பயிற்றுவிப்பாளர்களையும் பயிற்றுவிப்பு மேம்பாட்டையும் கண்காணிக்கும் பொறுப்பை என்னிடம் இதுவரைக்கும் ஒப்படைத்ததற்கு சிங்கப்பூர் காற்பந்து சங்கத்திற்கு நன்றி கூற விரும்புகிறேன். எல்லாம் நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இத்திட்ட இலக்குகள் கைகூடும் என நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று தெரிவித்தார் திரு வின்சென்ட்.