இரு புள்ளிகளை இழந்துவிட்டதாக புலம்பும் கிளோப்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மீண்டும் முதலிடத் திற்கு முன்னேறியபோதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்த இந்த ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.
போட்டி முடிந்தபின் பேசிய கிளோப், "இது ஒரு வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. எண்ணியதுபோலவே எங்களின் தொடக்க மும் அமைந்தது. அதன்பின் ஹெரேரா, மாட்டா, லிங்கார்ட் என யுனைடெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறியதைப் பயன்படுத்தி அக்குழுவை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதைச் செய்யத் தவறி விட்டோம்," என்று வருத்தப்பட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல் 2-0 என சௌத்ஹேம்டனைத் தோற்கடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!