இரு புள்ளிகளை இழந்துவிட்டதாக புலம்பும் கிளோப்

இரு புள்ளிகளை இழந்துவிட்டதாக புலம்பும் கிளோப்

1 mins read

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மீண்டும் முதலிடத் திற்கு முன்னேறியபோதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்த இந்த ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது. போட்டி முடிந்தபின் பேசிய கிளோப், "இது ஒரு வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. எண்ணியதுபோலவே எங்களின் தொடக்க மும் அமைந்தது. அதன்பின் ஹெரேரா, மாட்டா, லிங்கார்ட் என யுனைடெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறியதைப் பயன்படுத்தி அக்குழுவை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதைச் செய்யத் தவறி விட்டோம்," என்று வருத்தப்பட்டார். மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல் 2-0 என சௌத்ஹேம்டனைத் தோற்கடித்தது.