முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடு களின் கிரிக்கெட் வாரிய நிர் வாகிகள் கலந்துகொள்கின் றனர்.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்க வில்லை. இந்த விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தக வல்கள் தெரிவிக்கின்றன.
உலக டெஸ்ட் வெற்றியாளர் கிண்ண இறுதிப்போட்டி இங்கி லாந்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
இரு நாடுகளுக்கு இடை யிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வோர் அணியும் புள்ளி களைப் பெறும்.
அதிக புள்ளிகளைப் பெறும் அணி, டெஸ்ட் வெற்றியாளர் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். இந்தப் போட்டிக் கான ஒளிபரப்பு உரிமம் வழங் குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப் படுகிறது.
முக்கியமாக, இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி ஜூன் 16ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலை யில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!