ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணி

நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஏரன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து தவான் 21 ஓட்டங்களிலும் அம்பதி ராயுடு 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
நான்காவது விக்கெட்டுக்கு விராத் கோஹ்லியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை மிக வேகமாக உயர்த்தியது. 46 ஓட்டங் கள் எடுத்தபோது, விஜய் சங்கர் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந் தார். கேதர் ஜாதவ் 11 ஓட்டங்களிலும் டோனி ஓட்டம் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந் தாலும் விராத் கோஹ்லி தனது 40வது சதத்தை அடித்தார்.
அவர் 116 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 48.2 ஓவர்களில் 250 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டைக் கைப்பற்றி கொண்டாடும் இந்தியாவின் குல்தீப் சிங் (இடது), விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!