சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை: ராணுவ தொப்பியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் காரை மோதச் செய்தான். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப்பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவத் தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவத் தொப்பியுடன் களமிறங்கினர். அத்துடன் இந்தப் போட்டிக்கான சம்பளத்தை மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத் தொப்பியை வழங்கும் டோனி. படம்: பிசிசிஐ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!