புதுடெல்லி: கிரிக்கெட் ஆட் டத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் சூதாட்டத்தில் தொடர் பிருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஸ்ரீசாந்த் (படம்) மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள் ளது.
ஸ்ரீசாந்த்தை கிரிக்கெட் போட்டி களில் சேர்த்துக்கொள்வது குறித்து வாரியம் மூன்று மாதங் களுக்குள் முடிவெடுக்க வேண் டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித் தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுட் கால தடைவிதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.