ஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்

ஐபிஎல் போட்டியில் நடப்பு வெற்றியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்தும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் காயம் காரணமாக இரு முக்கிய வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே விலகியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் 12வது ஐபிஎல் போட்டி நாளை தொடங்குகிறது.
முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி யில் பெரும்பாலான வீரர்களை மாற்றவில்லை. இரு வீரர்கள் மட் டுமே எடுக்கப்பட்டனர். சிஎஸ்கே அணியில் கடந்த பருவத்தில் பந்துவீச்சில் மாபெரும் தூணாக விளங்கியவர் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி.
தற்போது தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையே டி20 போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி யின்போது, பந்துவீசிய சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள லுங்கி இங்கிடிக்குத் தோள்பட்டை யில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் பந்துவீசுவதை நிறுத்தி ஓய்வெடுத்தார்.
அதன்பின் மருத்துவமனைக் குச் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அவருக்குத் தோள் பட்டையில் தசைநார் காயம் ஏற் பட்டது தெரியவந்தது.
இந்தக் காயம் சரியாக குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் இங்கிடியிடம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!