உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கரும் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி மே 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் போட்டியை ஏற்று நடத்துகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய பத்து நாடுகள் போட்டியில் பங்கேற்கின்றன.