மான்செஸ்டர்: இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி காணாவிடில் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி ஆறு குழுக்களில் ஒன்று என்ற நிலையை மான்செஸ்டர் யுனைடெட் இழக்க நேரிடலாம் என அக்குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் கவலை தெரி வித்துள்ளார்.
யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளை யாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அக்குழுவை மான்செஸ்டர் சிட்டி குழு 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இதன்மூலம் பட்டியலின் முதல்நிலையை மீண்டும் எட்டிப் பிடித்தது சிட்டி. இன்னும் மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இரண்டாமிடத்தில் இருக்கும் லிவர்பூலைவிட ஒரு புள்ளி மட்டுமே சிட்டி கூடுதலாகப் பெற்றுள்ளது. இதனால் இந்தப் பருவத்தின் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்ற அவ்விரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மாறாக, சிட்டியைவிட 25 புள்ளிகள் குறைவாகப் பெற்று 64 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் இருக்கிறது யுனைடெட்.
கடைசியாக ஆடிய ஒன்பது ஆட்டங் களில் யுனைடெட் ஏழில் தோற்றுப்போனது.
இதே போக்கு தொடரும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் உல்வ்ஸ், லெஸ்டர், எவர்ட்டன் போன்ற குழுக்கள் யுனைடெட் டைப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடும் என்று சோல்சியார் எச்சரித்துள்ளார்.
"போட்டி முடிவுகள் என்னைக் கவலைக் குள்ளாக்குகின்றன. அதே நேரத்தில், தோல் விக்கு இன்னார்தான் காரணம் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இது உகந்த தருணமல்ல. வீரர்கள் ஒன்றிணைந்து ஆட வேண்டும். நான்காவது இடம் எட்டிப் பிடிக் கும் தூரத்தில்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்," என்றார் அவர்.
நேற்றைய ஆட்டத்தில் பெர்னார்டோ சில்வா (54'), லிரோய் சானே (66') ஆகிய இருவரும் சிட்டிக்காக ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர்.
அடுத்து வரும் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றியாளர் பட்டத்தை சிட்டி தக்கவைத்துக்கொள்ளும். இதை அறிந்திருந்தபோதும் மெத்தனமாக இருந்துவிடாது, நிதானமாகவும் பதற்றப் படாமலும் விளையாடவேண்டும் என சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தமது வீரர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தோல்வியிலும் துவளாத நம்பிக்கை
இதற்கிடையே, யுனைடெட்டைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று ஐந்தாம் நிலையில் இருக்கும் ஆர்சனல் குழுவும் அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்து அதிர்ச்சி அளித்தது.
கடந்த வார இறுதியில் கிரிஸ்டல் பேலசிடம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த ஆர்சனல், நேற்று உல்வ்சிடம் 3-1 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்vயது.
இந்நிலையில், "எங்களது கைவசம் இருந்த நான்காமிடத்தைத் தக்கவைக்கும் வாய்ப்பை பறிகொடுத்துவிட்டோம். கடின மான இலக்கு என்றபோதும் எங்களால் அதை மீட்டெடுக்க இயலும்," என்று நம்பிக் கையுடன் கூறினார் ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி.