பெங்களூரு: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தான் ஆடிய முதல் ஆறு ஆட்டங்களிலும் தோற்று அவமானப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இப்போது அதற்கு நேர்மாறாக வெற்றிநடை போடத் தொடங்கி உள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி 17 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்குக் கிடைத்த 'ஹாட்ரிக்' வெற்றி என்பது குறிப் பிடத்தக்கது.
முதலில் பந்தடித்த பெங்களூரு ஒரு கட்டத்தில் 81 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இந்நிலையில், 5வது விக்கெட் டுக்கு இணைந்த ஏபி டி வில்லி யர்சும் மார்க்கஸ் ஸ்டோய்னிசும் அதிரடியாக ஆட, பெங்களூரு அணி 200ஐத் தாண்டியது.
டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாச, அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங் களைக் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில் முன்னணி வீரர்கள் ஓரளவு பொறுப்புடன் ஆடியபோதும் அதனால் ஏழு விக் கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
42 ஓட்டங்களை விளாசிய தொடக்க வீரர் ராகுல் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3,000 ஓட்டங்களை எட்டிய இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.