இறுதி­யில் மிரட்டிய இளம் வீரர்கள்

இறுதி­யில் மிரட்டிய இளம் வீரர்கள்

2 mins read

கோல்­கத்தா: அடுத்து ­வரும் போட்டிகள் அனைத்­தி­லும் வென்றால் மட்டுமே 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னே­றும் வாய்ப்பு கைகூ­டும் என்ற நிலை­யில், ராஜஸ்­தான் ராயல்ஸ் அணி­யின் அந்த நம்பிக்கை ஈடே­றும் என்ற எண்­ணத்தை விதைத்து ­வரு­கின்ற­னர் அந்த அணி­யின் இளம் வீரர்கள்.

கோல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட் டத்­தில் நூறு ஓட்டங்­களை எடுக்­கும் முன்னரே ஐந்து விக்கெட்டு­களை இழந்து விட்டபோ­தும் 17 வய­தான இந்திய வீரர் ரியான் பராக்­கும் 24 வய­தான இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்ச­ரும் சேர்ந்து ராஜஸ்­தான் அணியை வெற்றிப்­ பாதைக்கு அழைத்­துச்­ சென்ற­னர்.

முத­லில் பந்தடித்த கோல்­கத்தா அணி­யும் ஒரு கட்­டத்­தில் 80 ஓட்டங் க­ளுக்கு ­நான்கு விக்கெட்டு­களை இழந்து தடுமாறியது. ஆயி­னும், ஒற்றை ஆளாக அணி­யைத் தூக்கி நிறுத்­தி­னார் அணித்­ தலை­வர் தினேஷ் கார்த்­திக். 50 பந்­து­­க­ளில் 97 ஓட்டங்­களை அவர் விளாச, 20 ஓவர் முடி­வில் கோல்­கத்தா அணி ஆறு விக்­ கெட் இழப்­பிற்கு 175 ஓட்டங்­களை எடுத்­தது.

அடுத்து ஆடிய ராஜஸ்­தான் அணி­யில் தொடக்க வீரர்கள் அஜின்கிய ரகானே­வும் சஞ்சு சாம்ச­னும் நல்ல அடித்தளம் அமைத்­ தனர். இரு­வரும் சேர்ந்து முதல் விக்கெட் டுக்கு 53 ஓட்டங்­களை எடுத்­தனர்.

முந்தைய போட்டி­யில் சதமடித்த ரகானே 34 ஓட்டங்களி­லும் சாம்­சன் 22 ஓட்டங்களி­லும் ஆட்டமிழந்­தனர். ஸ்டீவ் ஸ்மித்­ (2), பென் ஸ்டோக்ஸ் (11) ஆகிய முன்னணி ஆட்டக்காரர்கள் விரை­வில் வெளியேறியபோ­தும் ரியான் பராக்­கும் ஜோஃப்ரா ஆர்ச்ச­ரும் கோல்­கத்தா வீரர் களின் பந்­து­­களை பவுண்டரிக்கு அனுப்­ பியபடி இருந்­தனர். பராக்­ 31 பந்­து­­க­ளில் 47 ஓட்டங்­களை­யும் ஆர்ச்சர் 12 பந்­து­­க­ளில் 27 ஓட்டங்­களை­யும் விளாச, நான்கு பந்து க­ளும் மூன்று விக்கெட்டு­க­ளும் எஞ்சி இருந்த நிலை­யில் ராஜஸ்­தான் அணி வெற்றி­யைச் சுவைத்­தது. நான்கு ஓவர் களை வீசி 20 ஓட்டங்­களை விட்டுத்­ தந்து இரு விக்கெட்டு­களைச்­ சாய்த்த ராஜஸ்­தான் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் ஆட்ட நாய­கன் ஆனார்.