இந்திய கிரிக்கெட் அணி வீரரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருபவருமான அஜின்கிய ரகானே, 30, ஹேம்ப்ஷியர் அணிக்காக இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆட இருக்கிறார். மே 12ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் இங்கிலாந்து புறப்படும் ரகானே, ஜூலை மாதம் வரை அங்கிருப்பார். கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ரகானே எட்டு போட்டிகளில் ஆடுவார். ஹேம்ப்ஷியர் அணிக்காக ஆடவிருக்கும் முதல் இந்திய வீரர் இவரே. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணைத் தலைவராக இருந்தாலும் உலகக் கிண்ணத் தொடருக்கான அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
கவுன்டி போட்டிகளில் விளையாடும் ரகானே
1 mins read

