லண்டன்: இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இடம்பெறும் முயற்சியில் முனைப்புடன் இருக் கும் மான்செஸ்டர் யுனைடெட் நாளை செல்சியுடனான மோதலை பிரம்மாண்டமான போட்டி என்று அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் வர்ணித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் கடைசியாக தான் விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் ஏழில் தோல்வியை சந்தித்துள்ள நிலை யில், பட்டியலில் நான்காம் இடத் துக்கு வரும் வாய்ப்பு அதற்கு இன்னமும் இருக்கிறது.
எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய நாட்டுக் குழுக்களுடன் போட்டி யிட்டு சாம்பியன்ஸ் லீக் விருதை வெல்லும் வாய்ப்பு என இவை அனைத்தும் வீணாகிவிட்ட நிலை யில், பிரிமியர் லீக்கில் சொந்த அரங்கில் மான்செஸ்டர் சிட்டி குழுவிடம் 0-2 எனத் தோல்வியைத் தழுவியது யுனைடெட்டின் மீதான நம்பிக்கையை மேலும் சீர்குலைத்து உள்ளது.
எனினும், பிரிமியர் லீக்கில் உள்ள மற்ற குழுக்களும் தோல்வி யடைந்து புள்ளிகளைக் கோட்டை விட்டுள்ளதால் யுனைடெட்டின் வாய்ப்பு இன்னும் முழுமையாகப் பறிபோகவில்லை.
இந்த நிலையில்தான் இன்னும் மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ள இந்த காற்பந்துப் பருவத்தில் தான் நிர்வாகியாகப் பதவியேற்றபோது கிடைத்த வெற்றிகளைப் போலவே மீதமிருக்கும் ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை சோல்சியார் உணர்ந் துள்ளதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
இதற்கிடையே, நேற்று செய்தி யாளர்களை சந்தித்த சோல்சியார், யுனைடெட்டின் நட்சத்திர வீரர் பால் போக்பா அற்புதமாக விளை யாடி வருகிறார் என்றும் அவர் இதற்குமுன் இதைவிட சிறப்பாக விளையாடியுள்ளதால் தற்பொழுது அவருக்கு எதிரி அவரே என்றும் விளக்கினார்.
அத்துடன், பால் போக்பா அடுத்த பருவத்திலும் யுனைடெட்டி லேயே தொடர்வார் என்று கூறி னார்.
ஆனால், இது குறித்து தம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், மான்செஸ்டர் யுனை டெட் கோல்காப்பாளர் டி கியா குறித்துக் கருத்துரைத்த சோல்சி யார் அவர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவரது ஆட்டத் திறன் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித் தார்.

