மும்பை: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் பேராயுதமாகத் திகழ்வார் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மைக்கல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது இந்திய அணிதான் வெல்லும் என்பது ஹோல்டிங்கின் கணிப்பு.
"சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்குச் சாதகமான அம்சம். அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாடி வரு கிறது. அதோடு, ஒரு சமநிலையான அணி யாகவும் திறமையான ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்டுள்ள அணியாகவும் அது திகழ்கிறது. வெற்றிகரமான அணியாகத் திகழ வேண்டுமெனில், நெருக்கடியான சூழ்நிலைகளிலும் எப்படி விளையாடுவது எனத் தெரிந்திருக்க வேண்டும். ஆகை யால், இம்முறை இங்கிலாந்து, இந்திய அணிகளில் ஏதேனும் ஒன்று கிண்ணம் வென்றால் ஆச்சரியப்பட மாட்டேன்," என்று ஹோல்டிங் கூறினார்.
"இந்திய அணியைப் பொறுத்தமட்டில் விராத் கோஹ்லி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகி யோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்திய அணிக்குக் கிண் ணத்தை வென்று தரும் ஆற்றல் இந்த இருவரிடத்திலும் உள்ளது," என்றார் அவர்.