பாரிஸ்: இந்தப் பருவத் திற்கான பிரான்சின் 'லீக் 1' காற்பந்தில் சிறந்த வீரர், சிறந்த இளம் வீரர் என இரு விருதுகளையும் தட்டிச் சென்ற பிரெஞ்சுக் காற்பந்து ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே, 20 (படம்), பிஎஸ்ஜி குழுவை விட்டு விலகி, ரியால் மட்ரிட் குழுவில் இணையக்கூடும் எனச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், "எம்பாப்பே எங் கேயும் போகவில்லை. அடுத்த பருவத்திலும் அவர் எங்களுக்காக விளையாடுவார்," என்று பிஎஸ்ஜி குழு கூறியிருப் பதன்மூலம் ஊகங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மொனாக்கோ குழுவில் இருந்து பிஎஸ்ஜிக்கு மாறினார் எம்பாப்பே. ஒரு பருவத்திற்குக் கடனாகப் பெற்ற அவரை பின்னர் நிரந்தரமாக வாங்கியது பிஎஸ்ஜி. இதற்காக 166 மில்லியன் பவுண்டு தொகை கைமாறியதாகக் கூறப்படு கிறது. இதன்மூலம் சக பிஎஸ்ஜி வீரர் நெய்மாருக்குப் பின், உலகில் ஆக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 2வது காற்பந்து வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்கார ரானார் எம்பாப்பே.
பிஎஸ்ஜிக்காக இதுவரை 86 போட்டிகளில் ஆடி 59 கோல்களை அடித்திருக்கும் இவர், இருமுறை லீக் பட்டத்தையும் ஒருமுறை பிரெஞ்சுக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.