நியூயார்க்: விளையாட்டுத்துறையில் இன ரீதியிலான தூற்றுதல் களுக்குத் தீர்வு காண வேண்டு மாயின் சம்பந்தப்பட்ட குழுக் களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மான்செஸ்டர் சிட்டியின் ரஹீம் ஸ்டெர்லிங் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்டெர்லிங் இக்கருத்தைத் தெரிவித்தார். ஆதரவாளர்கள் இனவாதக் கருத்துகளைத் தெரி வித்தால் அவர்களது குழுக்களிட மிருந்து ஒன்பது புள்ளிகள் பறிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழுக்கள் மூன்று ஆட்டங் களை ஆதரவாளர்களின்றி விளை யாட வேண்டும் என்றும் ஸ்டெர்லிங் கூறினார்.