லண்டன்: ஒரே ஒரு மோசமான இன்னிங்சை வைத்து வீரர்களின் திறமையை எடைபோடக் கூடாது. இது ஒரு மோசமான ஆட்டமாக அமைந்தது அவ்வளவுதான். மற்றபடி இந்தியாவின் பந்தடிப்பு குறித்துக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.
“சொந்த ஆடு தளங்களில் விளையாடி விட்டு இங்கு விளையாடுவது கடினமாகத்தான் இருக்கும். தவறுகளைத் திருத்திக்கொள்ள நமக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. திறமையை மேம்படுத்த இன்னும் உழைப்போம். எல்லாரிடமும் அனுபவம் உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,” எனக் கூறியுள்ளார்.