போர்ட்டோ: நாட்டிற்கும் காற் பந்துக் குழுவிற்கும் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் குறைந் தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு சிறந்த முறையில் விளையாடலாம் என போர்ச்சுகல் காற்பந்துக் குழு தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் உள்ள வேகம் 34 வயதாகும் ரொனால்டோவுக்கு தற்போது இல்லாவிடிலும் இன்று அளவும் ஆட்டங்களின் முக்கிய தருணங்களில் ஆட்டங்களை வெல்லக்கூடிய அபாரத் திறன் படைத்தவராக அவர் உள்ளார்.
நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் கடந்த புதன்கிழமை சுவிட்சர்லாந்து உடனான ஆட்டத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ அடித்து போர்ச்சு கலுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
தன்வசம் பந்து கிடைக்கும் போதெல்லாம் எதிர் அணியின் கோல் எல்லையில் சிம்மசொப்பன மாக காட்சியளித்தார் அவர்.
பெரும்பாலும் காயத்திலிருந்து விடுபட்டுள்ள ரொனால்டோ, அவருடைய வயதுக்கு தகுந்தவாறு ஆட்டத்திறனை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை உடையவர் என்று கூறிய சான்டோஸ், இன்னும் பல ஆண்டுகளுக்கு ரொனால்டோ உயரிய அளவில் விளையாட முடியாது என்று சொல் வதற்கு உரிய காரணம் இல்லை என்றார்.